இந்தியா

கடலை போட்ட மனைவி….. கழுத்தை அறுத்த கணவன்……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஓசூர்:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் மணிகண்டன் (30). ஓசூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த சிந்துஜா(27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் ஓசூர் லட்சுமி நாராயண நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், மணிகண்டனுக்கு மனைவி சிந்துஜா நடத்தையின் மீது சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே தகராறு எற்பட்டபோது ஆத்திரமடைந்த மணிகண்டன் கத்தியால் சிந்துஜாவின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.

ALSO READ  எல்லை தாண்டிய அதிகாரியின் உடலை எரித்த வடகொரியா:

இதனையடுத்து, அட்கோ காவல் நிலையத்தில் மணிகண்டன் சரணடைந்தார். இதனையடுத்து, மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தில் “கடந்த சில மாதங்களாகவே சிந்துஜா அடிக்கடி செல்போனில் பேசிவந்ததாகவும், இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. பேசுவதை நிறுத்தும் படி பலமுறை சொல்லியும் அவள் கேட்கவில்லை. இதனால், ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நான் அவரை கழுத்தறுத்து கொலை செய்தேன்” என கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி..

Shanthi

விஜய் மல்லையா திவாலாகிவிட்டார் -லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு..!

naveen santhakumar

கரையை கடக்க தொடங்கியது அதிதீவிர யாஷ் புயல் !

News Editor