தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஆக்ரா:-
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய 650 பேர் மட்டுமே தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தாஜ்மஹால் உள்ளிட்ட புராதன நினைவுச் சின்னங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தாஜ்மஹால், இன்று சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுகிறது.
எனினும், தாஜ் மஹாலில் உள்ள பொருள்களை தொடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் கடுமையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு மூன்று முறை அந்தப் பகுதி முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.