தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசினார்.
நாட்டின் 14-வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த சந்திப்பானது டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது. பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். மேலும் இந்த சந்திப்பானது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நன்றி கூறும் விதமாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.