தெலுங்கானா:-
தெலுங்கானாவில் திருமணம் ஆன மறுநாளே புதுமாப்பிள்ளை மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்த கணேஷ் என்பவருக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இத்திருமணத்தின் போதே மிகவும் களைப்பாக காணப்பட்டார் கணேஷ். மறுநாள் வீட்டில் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
உடனடியாக குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். இந்நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தங்கள் மகன் கணேஷின் இறப்பிற்கான காரணமாக அவரது பெற்றோர் கூறியதாவது:-
திருமண வரவேற்பின் போது அதிக சத்தத்துடன் நடந்த பாட்டுக் கச்சேரிதான் காரணமாக தான் கணேஷிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
அந்த அதீத இரைச்சலைக் கேட்ட பின்னர் அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனதாக அவரின் உறவினர்களும் கூறியுள்ளனர். திருமணம் முடிந்த மறுநாளே மணமகன் இறந்த நிகழ்வு தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.