இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது, இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க டெல்லி முதல்வர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், “டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவும் நோக்கில் டெல்லி அரசு சார்பில் 5000 ரூபாய் நிதி உதவி செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும் குடும்ப அட்டை தாரர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.