புதுடெல்லி:
மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் மாணவருக்கு தண்டனை வழங்குவதாக கருதி மாணவரின் காலைப் பிடித்து மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது சோனு என்ற மாணவன் மற்றொரு மாணவனை கடித்து விட்டான். மாணவனை கடித்ததற்காக தலைமை ஆசிரியர் மனோஜ் சிறுவனை மிரட்டி மன்னிப்பு கேட்க கூறி உள்ளார். ஆனால் சிறுவன் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், 2ம் வகுப்பு படிக்கும் சோனுவை மேல் மாடிக்கு இழுத்துச் சென்றுள்ளார். அங்கு மன்னிப்பு கேட்காவிட்டால் மாடியில் இருந்து கீழே போட்டுவிடுவதாக மாணவர் சோனுவின் ஒரு காலை பிடித்து மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்டவாறு மிரட்டி உள்ளார்.
சிறுவனின் அலறல் மற்றும் அழுகையைக் கேட்ட குழந்தைகள் கூட்டம் கூடி பதற்றத்துடன் வேடிக்கை பார்த்ததை அறிந்த பிறகுதான் சோனுவை தலைமை ஆசிரியர் விடுவித்து உள்ளார்.