உத்தரப்பிரதேசம்:
இப்போது ஆன்லைனில் பல பெண்கள் வீடியோ கால் மூலம் பல ஆண்களிடம் வலை வீசி அவர்களது ஆசையை தூண்டி அவர்களின் நிர்வாண வீடியோக்களை பதிவு செய்து விடுகிறார்கள் .பிறகு அதை காண்பித்து மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு முன்னணி நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு நிர்வாகி, “ஆன்லைன் டேட்டிங் ஆப்பில்” தன்னை பதிவு செய்து கொண்டார் . பிறகு அந்த ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண்ணோடு நட்பு கொண்டார் .அதன் பிறகு அந்த பெண்ணோடு தினமும் சாட் செய்து வந்த நிலையில் ,ஒரு நாள் அந்த பெண் அவரை பிறந்த மேனியாக வரும்படி கூறினார்.
அதனால் அவரும் அப்படி அந்த வீடியோ காலில் வந்தார் .அப்போது அந்த பெண் அந்த காட்சியை ரெகார்ட் செய்து விட்டார் .சில நாள் கழித்து அந்த “ஆன்லைன் டேட்டிங் ஆப்” லிருந்து ஒருவர் போன் செய்து அவரிடம் தங்களின் ஆபாச வீடியோ எங்களிடம் சிக்கியுள்ளது என்று கூறினார். அதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த அவரிடம் அந்த நபர்கள் இந்த ஆபாச வீடியோவை ஆன்லைனில் பதிவேற்றாமல் இருக்க 50,000 ரூபாய் பணம் கேட்டார்கள்.
ஆனால் தன்னால் அவ்வளவு பெரிய தொகை தர முடியாது என்று அவர் கூறினார் .அதனால் அவர் முதலில் 5,000 ரூபாய் கொடுத்தார் .ஆனால் மேலும் பணம்கேட்டு அவர்கள் அவரை ப்ளாக் மெயில் செய்ய தொடங்கினார்கள் .
இதனால் அவர் பயந்து போய் அந்த “ஆன்லைன் டேட்டிங் ஆப்” நிர்வாகிகள் மீது போலீசில் புகாரளித்தார் . நொய்டா காவல்துறை தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நிர்வாகியின் புகாரின் அடிப்படையின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையின் சைபர் செல் பிரிவினரிடமிருந்தும் உதவி கோரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது .