2020 ஆம் ஆண்டு முடியவில்ல நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களாகவே இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம்பெற்றிருந்தார்.
கொரோனா காலத்தில் ஜியோ நிறுவனத்தில் கோடிக்கணக்கான முதலீடுகள் குவிந்தன. அதன் காரணமாக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி ஒவ்வொரு இடமாக முன்னேறி வந்தார். இது பலராலும் பாராட்டப்பெற்றது.
இந்நிலையில் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.5.63 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் 187 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் பிடித்துள்ளார்.
அதனையடுத்து இரண்டாம் இடத்தில் எலான் மஸ்க் பின்னர் பில்கேட்ஸ், அர்னால்ட், மற்றும் மார்க் சூப்பர் உள்ளிட்டோர் அதற்கு அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.