தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா பொது முடக்க 5-ம் கட்ட தளர்வுகளில் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதியினை அளித்துள்ளது.
திரையரங்குகள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை அக்டோபர் 15ம் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 50% சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 5-ம் தேதி முதல் ஹோட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50% சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.மேலும் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி அக்டோபர் 15-க்குப் பிறகு பெற்றோர்களின் கருத்தைக் கேட்டறிந்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.