சென்னை :
வருடத்தில் இரண்டு நாட்கள் மதிய நேரத்தில் நிழலைப் பார்க்க முடியாத அளவுக்கு நிழல் நமது காலுக்கு அடியில் விழும். அந்த நாள் ‘நிழலில்லா’ நாளாக அழைக்கப்படுகிறது. இந்த நிழலில்லா நாள் வருடத்தில் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதம் நிகழும். இந்த வருடத்தின் இரண்டாம் முறையாக இன்று தமிழகத்தில் நிழலில்லா நாள் நிகழ்ந்தது
தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பிரசார உபகுழு சார்ப்பில் இணைய வழியாக நிழலில்லா நாள் நிகழ்வை காண ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் நிழலில்லா நாள் மக்கள் அனுபவித்தனர் . ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி திருப்பத்தூர், ஓசூர் ஆகிய இடங்களில் நிழலில்லா நாளை மக்கள் கண்டு களித்தனர்.
சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் முழுமையாக காணமுடியாத நிலை இருந்ததால் மக்கள் வருத்தமடைந்தனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளைக் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புது டெல்லி விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை அறிவியல் அறிஞர் முனைவர் வெங்கடேஸ்வரன் பொதுமக்களுக்கு நிழலில்லா நாள் குறித்து விளக்கமளித்து செயல்முறையும் செய்து காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.