காஷ்மீரில் உரி அருகே எல்லைப்பகுதியில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையான உரி அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்ற தகவலின் அடிப்படையில் இந்திய இராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டருந்தனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு இன்று 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். மற்ற மூன்று பேர் காட்டுக்குள் ஓடி தப்பிவிட்டதாகவும், அவர்களை தேடும்பணி தற்போது நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்திருக்கிறது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே 47ரக துப்பாக்கிகள், 8 கைத்துப்பாக்கிகள், 70 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலர் ஊடுருவியிருக்கலாம் என்ற தகவலால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையை இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இதேபோன்ற ஊடுருவல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சா.கற்பகவிக்னேஷ்வரன்