நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது
இந்த குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் மார்ச் 3 அன்று காலை 6 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் குற்றவாளிகள் 4 பேரும் கடைசியாக தங்கள் உறவினர்களைச் சந்தித்துக் கொள்ளலாம் என திஹார் சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து திஹார் சிறை நிர்வாக அதிகாரி கூறுகையில்:-
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கிலிடும் தேதி நெருங்கிவிட்டதால், அவர்கள் கடைசியாக தங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களையும், சந்தித்துக்கொள்ளலாம் என சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் நான்கு பேரும் நாள்தோறும் குடும்பத்தினரைச் சந்திக்கிறார்கள், என்றாலும் கடைசி சந்திப்பு என்ற ஒன்று இருக்கிறது. அதன்பின் அவர்கள் யாரும் குடும்பத்தினரைச் சந்திக்க முடியாது எனத் தெரிவித்தார்.
இதனிடையே வினய் குமார் சர்மா சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் தனக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மனநிலை சரியில்லாமல் இருப்பதால், உளவியல் சிகிச்சை தேவைப்படுவதாக கூறி மனுத்தாக்கல் செய்திருந்தான்.
இன்று, இந்த மனுவினை விசாரித்த டெல்லி நீதிமன்றம் அவனது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.