மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.
அதனையடுத்து குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர். இதன் காரணமாக டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் சிங்கு, காசிபூர், டிக்ரி போன்ற இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் உள்ளே நுழைந்து விடகூடாது என்பதற்காக காவல்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் டெல்லி புறநகர் எல்லையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
மேலும் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் டெல்லியில் கடும் வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் ‘ஜக்கா ஜாம்’ எனும் சாலை மறியல் போராட்டத்தை இன்று முதல் முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.