டோக்கியோ: ஒலிம்பிக் பாட்மின்டன் காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு இந்தியாவின் பிவி சிந்து முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் யமாகுச்சியை சந்தித்தார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-13 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் சிந்து சிறப்பாக செயல்பட்டார்.
ஒரு கட்டத்தில் 14-8 என சிந்து முன்னிலை பெற்றார். இதன்பின் யமாகுச்சி அடுத்தடுத்து புள்ளிகள் பெற்றார். சிந்துவை முந்திய இவர் 20-18 என செட்டை வசப்படுத்தும் நிலைக்கு சென்றார்.
பின் சுதாரித்துக் கொண்ட சிந்து, தொடர்ந்து நான்கு புள்ளிகள் எடுக்க, 22-20 என கைப்பற்றினார். முடிவில் சிந்து 21-13, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதன் மூலம் பதக்க வெல்லும் வாய்ப்பை அதிகபடுத்தியுள்ளார்.