அகர்தலா:-
திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தெப் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திரிபுரா மாநிலம் பாஜக முதலமைச்சர் பிப்லப் குமார் தெப் தன்னை சுய தனிமைப்படுத்துவது உட்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பிப்லப் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:-
எனது குடும்பத்தில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குடும்பத்தில் மற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மற்றவர்களுக்கு இல்லை. எனக்கான பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. எனினும் மருத்துவர்களின் அறிவுரைப்படி எனது வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்தி உள்ளேன்.
எனது குடும்பத்தினர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
திரிபுராவில் இதுவரை கொரோனாவிலிருந்து 4,400 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது 1700 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 27 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள்.