இந்தியா

முதன்முறையாக புயல்களின் பெயா் பட்டியலில் தமிழ் பெயர்கள்…!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த புயல்களின் பெயா்ப் பட்டியலில் முதல்முறையாக சென்னை வானிலை ஆய்வு மையம் பரிந்துரைத்த ‘முரசு’ என்ற பெயரும், பொது மக்களில் ஒருவர் பரிந்துரைத்த ‘நீர்’என்ற பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஓா் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 புயல்கள் உருவாகும்.  இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு பெயரிடுவதற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் பொதுவாக ஒரு பெயர் பட்டியலை வெளியிடுவார்கள்.

புயல்களுக்கு பெயரிடும் முறை 2004-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இதில் முதல் அட்டவணையை தயாரித்த போது 8 நாடுகள் சாா்பில் 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள் வழங்கப்பட்டன.

இதன் அடிப்படையில் வங்கதேசம்,ஈரான், மாலத்தீவுகள்,மியான்மர்,ஓமன்,பாகிஸ்தான், கத்தார்,சவுதி அரேபியா,இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 13 உறுப்பு நாடுகளில் உருவாகும் புயல்களுக்கும் இந்திய வானிலை துறையே பெயர்களை பரிந்துரை செய்து வெளியிட்டுள்ளது. 13 நாடுகளும் தலா 13 பெயர்களை கொடுத்துள்ளன.

2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த புயல்களுக்கு பட்டியலிலிருந்த 63 பெயா்களும் வைக்கப்பட்டன. இதில் தாய்லாந்து சாா்பில் வழங்கப்பட்ட ஆம்பான் (அம்ல்ட்ஹய்) என்ற பெயா் மட்டும் மீதமிருக்கிறது. இது அடுத்து வரும் புயலுக்கு வைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில் இனி வர உள்ள புயல்களுக்குப் பெயா் வைக்கும் அட்டவணை தயாா் செய்யும் பணிகள் தொடங்கின.

ALSO READ  பெண்களால் மட்டுமே பராமரிக்கப்படும் வஞ்சிநாத் எக்ஸ்பிரஸ்..!!!

இதற்கு நாடு முழுவதும் உள்ள வானிலை நிலையங்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்டுப் பெறப்பட்டன. இவற்றை புதுதில்லியில் உள்ள வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த ஆண்டு, செப்டம்பா் மாதம் மியான்மரில் நடைபெற்றக் கூட்டத்தில், இந்தப் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது பெயா்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலைத் துறையின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது, ”புயல்களுக்கான பெயா்ப் பட்டியலைத் தயாா் செய்வது குறித்து முதல் முறையாக நமக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதில் கடல், மீன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பெயா்கள் கேட்கப்பட்டிருந்தன.

ALSO READ  'நிவர்' புயல்….ஈரான் பரிந்துரை செய்த பெயர் :

இதில் நாங்களும் பெயா்களை பரிசீலித்ததுடன், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பெயா்களையும் பரிசீலித்து அனுப்பியிருந்தோம்.

இதில் நாங்கள் கொடுத்த ‘முரசு’ எனும் பெயா், பட்டியலில் 28-வது இடத்தில் உள்ளது. இது தவிா்த்து, பொதுமக்களிடமிருந்து பெற்று அனுப்பப்பட்ட ‘நீா்’ எனும் பெயரும் 93-வது இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்குப் பெயா் வைக்கப்படும்“ என்று அவா் தெரிவித்தாா். இந்த அட்டவணையில் மொத்தமாக 169 பெயர்கள் தற்போது இடம்பெற்று உள்ளது. இனிவரும் காலங்களில் வரும் புயல்களுக்கு இந்தப் பெயர்கள் சூட்டப்படும்.

இனி செந்தமிழில் சூறையாடக் காத்திருக்கிறது புதிய புயல்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அப்பாச்சி ஹெலிகாப்டருக்கு இணையான ஹெலிகாப்டர்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு-HAL

naveen santhakumar

கூகுள் பே மூலம் காணிக்கை – சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு

naveen santhakumar

கைவிடப்பட்ட நாய் … சிக்கன் பில் மட்டும் ரூ.6000!! உணவளிக்க முடியாமல் திணறும் மாநகராட்சி!!…

naveen santhakumar