புதுடில்லி:
நாடு முழுவதும் சிறப்பாக பணிபுரிந்த 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. இந்த விருதுகள் சுதந்திர தினத்தையொட்டி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 8 காவல்துறை அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. மிக சிறப்பாக பணிபுரிந்ததற்காக காவல் ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுமைக்கும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் : 15 பேர் சிபிஐ, மஹாராஷ்டிரா மாநிலம் , மத்திய பிரதேசம் சேர்ந்த தலா 11 பேர், உத்தரப்பிரதேசம் சேர்ந்த 10 பேர், கேரளா, ராஜஸ்தானை சேர்ந்த தலா 9 பேர், தமிழகத்தை சேர்ந்த 8 பேர், பீஹாரை சேர்ந்த 7 பேர், குஜராத், கர்நாடகா மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 28 பேர் பெண் காவலர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள பட்டியலில் இடம் பெற்றவர்கள் அனைவருக்கும் வரும் சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.