லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் 2022 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் முகாமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு 40% இடங்கள் ஒதுக்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பெண்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அவர்கள் முன்னேற வேண்டும். இந்த முடிவு உத்தர பிரதேசத்தின் பெண்களுக்கானது. இந்த முடிவு மாற்றத்தை விரும்பும் பெண்களுக்கானது என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் விதமாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.