கான்பூர்:-
உத்தரப்பிரதேசத்தில் அரசியல் செல்வாக்குப் பெற்ற தாதாவாக வலம்வந்த விகாஷ் துபே (48) நேற்று போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப் பட்டார்.
இந்நிலையில் விகாஷ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான போலீஸ் அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து மக்கள் மரியாதை செலுத்தினார்கள்.
நேற்று காலை 6:30 மணி அளவில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கைது செய்யப்பட்ட விகாஷ் துபேயை உ.பி போலீசார் அழைத்து கொண்டு கான்பூர் நகருக்கு வெளியே போலீசார் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. அதை பயன்படுத்தி போலீசை தாக்கிய தப்ப முயன்ற விகாஷ் துபேயை நோக்கி போலீசார் சுட்டதில் மார்பில் மூன்று குண்டுகள், கையில் ஒரு குண்டு பாய்ந்து விகாஷ் உயிரிழந்தான்.
இந்நிலையில் மக்கள் இதை வரவேற்று போலீசாருக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி மரியாதை செய்துள்ளனர்.