தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
உலகின் பல நாடுகளுக்குக் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா மிக வேகமாகப் பரவியது.
தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த மேற்குவங்கத்தில், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.