நியூ டெல்லி:-
உலக சுகாதார அமைப்பின் அறிக்கை படி உலக அளவில் கருணா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆக உள்ளனர் என்று கூறியுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 முதல் 15 சதவீதம் பேர் தூக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக கூறுகிறது.
ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டவர்களின் வயது விகிதம் முற்றிலும் வேராக அமைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 3,082 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர், 229 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளது.
இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளவர்கள் 17 சதவீதம் பேர்.
41 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக உள்ளது.
20 வயதிற்கு உட்பட்டவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 சதவீதமாக உள்ளது என்று தெரிவித்தார்.