நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்து துவங்க இருக்கிறது. இதுகுறித்து கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
*பேருந்தில் 50% சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.
*பயணிகள் தங்களுடைய இருக்கை மற்றும் நிற்கும் இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவேண்டும்.
*பேருந்தில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்பு வழியையும் பயன்படுத்த வேண்டும்.
*ஒவ்வொரு முறை பேருந்து இயங்கும் போதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தபடுத்த வேண்டும்.
*மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே பேருந்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
*பஸ்ஸில் ஏறி இறங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
*ஒவ்வொரு பேருந்தில் பயணிக்கும் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது வேலையை துவங்கும் முன்பு உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
*அவர்களுக்கு முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவை வழங்கப்படும்.
*பயணிகள் பயன்படுத்த அவர்களுக்கென்று பிரத்யேக சானிடைசர்கள் வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறான விதிமுறைகளை அரசு போக்குவரத்து கழகம் விதித்துள்ளது.