தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் விபத்துக்குள்ளான Mi-17V5 ஹெலிகாப்டரின் விமானியாக விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான் பயணித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
முக்கிய ஆலோசனைக்கூட்டத்திற்காக பல உயர் ராணுவ அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி எரிந்து விழுந்ததில் 13 பேரின் உடல் மீட்கப்பட்டது. ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது. விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான் 109வைத்து ஹெலிகாப்டர் பிரிவின் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.