பாட்னா:
பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்த சலவை தொழில் செய்துவரும் லாலன் குமார் (20). மஜோர் கிராமத்தில் வசிக்கும் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இக்குற்றம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் லாலன் குமாரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐந்து மாதம் சிறைச்சாலையில் இருந்த லாலன் குமார் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாலியல் வழக்கில் கைதாக்கி சிறையில் உள்ள லாலன் குமார் 6 மாதம் கிராமத்தில் உள்ள பெண்களின் துணிகளை தனது சொந்த செலவில் துவைத்து சலவை செய்து தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜஞ்சர்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமார் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
ஜஞ்சர்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமார் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் இது பெண்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும் என்றும் மஜோர் கிராமத் தலைவர் நசீமா கட்டூன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.