தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
இளங்கலை மருத்து படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்வி இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதேபோல நீட் விண்ணப்பங்களில் திருத்தங்களை ஆகஸ்ட் 11 முதல் 14 வரை மேற்கொள்லாலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.