இப்போதெல்லாம் மக்கள் கிரைண்டர்கள் மற்றும் மிக்சர் போன்றவற்றைப் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தவும் விரைவாக வேலை செய்யவும் செய்கிறார்கள். இதன் காரணமாக ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றின் பயன் என்ன என்பதையே அறியாமல் நின்றுவிட்டனர்.
இந்நிலையில் சட்னி அல்லது மசாலாப் பொருள்களை ஒரு அம்மிக்கல் அல்லது ஆட்டுக்கல்லில் அரைப்பதன் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா?
மின்சார வழக்கமான முறைகள் மூலம் சட்னி அல்லது மசாலாப் பொருள்களை அரைப்பதன் மூலம், அவை இயற்கையான சுவையைத் தக்கவைத்துக்கொள்ள மறுக்கின்றன. மின்னணு இயந்திரங்களின் உதவியுடன் மசாலாவை அரைப்பது பெரும்பாலும் மசாலாப் பொருட்களின் சுவையை மாற்றுகிறது.
மேலும் நீங்கள் ஆட்டுக்கல் அல்லது அம்மிக்கல்லில் ஏதாவது அரைத்தால் அது ஒரு வகையான உடற்பயிற்சியை உங்களுக்கு அளிக்கிறது. இதன் விளைவு என்னவென்றால், உங்கள் கொழுப்பு படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது, மேலும் நீங்கள் எளிதாக மெலிந்து போக ஆரம்பிக்கிறீர்கள். ஆனால் இதற்காக, நீங்கள் ஒவ்வொரு நாளும் இந்த கல்லில் ஏதாவது அரைக்க வேண்டும் என்று பொருள் அல்ல. வீட்டின் தேவைக்கேற்ப இவற்றை பயன்படுத்தினாலே போதுமானது.
சட்னி அல்லது பயறு வகைகளை அரைக்க கற்கலை பயன்படுத்தினால், அது மின்சாரத்தை உட்கொள்ளாது. அதேவேளையில் மிக்சர் கிரைண்டர்களை நாம் பயன்படுத்தினால் அது அதிக சக்தியை விழுங்குகிறது. ஆக பொருளாதார ரீதியிலும் நமக்கு பல சேமிப்புகளை வழங்குகிறது இந்த ஆட்டு கற்கள். எனவே, தற்போதைய தலைமுறை அதைப் பயன்படுத்தல் வேண்டும்.