பொதுவாக குதிரைக்கு குதிரைக்கு தான் கொள்ளை என்று கிராமப்புறங்களில் விளையாட்டாக சொல்வார்கள். ஆனால் கொள்ளில் மருத்துவ குணங்கள் அதிக அளவில் இருக்கின்றன.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களை தீர்ப்பதில் கொள்ளு பெரும்பங்கு வகிக்கிறது.
கொள்ளை ஊறவைத்து அந்த நீரை குடிக்கவேண்டும். இப்படி குடித்தால் உடம்பில் இருந்து கெட்டநீர் வெளியேறும். சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கலாம்.இதில் அதிக இரும்புச் சத்தும் இருக்கிறது.
கொள்ளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் இன்சுலின் சுரப்பு அதிகரித்து நீரிழிவு கட்டுப்படுத்தப்படுகிறது.
மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கொள்ளு ஒரு வரப்பிரசாதம் . இதில்நார்ச்சத்து இருப்பதால் தினமும் இலகுவாக மலம் கழிக்க முடியும்.
கொள்ளில் இரும்புச்சத்து அதோடு பாஸ்பரஸ், புரதம் ,கால்சியம் ,போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இதனால் ஆண்கள் கொள்ளை உணவில் சேர்க்கும் பொழுது விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆண் மலட்டு தன்மையை நீக்கும்.
விந்தணுக்கள் குறைவாக உள்ள ஆண்கள் வாரம் மூன்று முறை உணவில் கொள்ளை சேர்த்துக் கொள்ளவேண்டும். நிச்சயம் இரண்டு மாதங்களில் நல்ல பலன்களை தரும்.
உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் கொள்ளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் ஒரு பிடி கொள்ளை ஊறவைத்து மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை அப்படியே குடிக்க வேண்டும் .இப்படி சில நாட்கள் செய்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும் குழல் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்காது.