இட்லிகள் – 5
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 சிறியது
வெங்காயம் – 1 பெரியது குடைமிளகாய் – 1/2
தக்காளி – 1 பெரியது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்.
கருவேப்பிலை -சிறிதளவு.
உப்பு – தேவையான அளவு.
கொத்தமல்லி இலைகள் -சிறிதளவு.
இட்லி மஞ்சூரியன் செய்வதற்கு முதலில் இட்லிகளை சதுரமாக கத்தியால் வெட்டிக் கொள்ளுங்கள்.
வெட்டிய இட்லி துண்டுகளை சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சீரகம் பொரிந்து வந்ததும் அதனுடன் பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, பொடிதாக நறுக்கிய வெங்காயம் இவைகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
வெங்காயம் வதங்கியதும் அதில் குடைமிளகாய் சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் , மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அனைத்தும் சுருள வதங்கியதும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து அதில் கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.
எஸ். ராஜலெக்ஷ்மி