தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டீ :
- தினமும் காலை,மாலை டீ வைக்கும்போது பாலில் இஞ்சி, ஏலக்காய், லவங்கம், மிளகு, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு குடித்தால் சுவையாக இருக்கும்.
பாகற்காய் வறுவல் :
- பாகற்காய் வறுவல் செய்யும் போது, காயை எண்ணெயில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால் மொறுமொறுப்பாக இருக்கும்.
ஓமம் :
- ஓமத்தை அரைத்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்தால் கடுமையான தலைவலி நீங்கும்.
- ஓமத்தைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பசைபோலச் செய்து, வயிற்றின்மீது பற்றுப் போட வயிற்றுவலி குணமாகும்.
- ஓமம்,மிளகு,வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை,மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு, வேளைக்கு 1/2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிக்கழிச்சல் ஆகியவை தீரும்.
முருங்கைக்கீரை :
- ஒரு கடாயில் வெங்காயம் ,மஞ்சள்தூள், காம்புகளை போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வெந்ததும் கடைந்து எலுமிச்சைச் சாறு ,மிளகாய்த்தூள், சீரகத்தூள் ,சேர்த்து கலக்கி இறக்கவும். இந்த சூப்பை வாரத்திற்கு இருமுறை பருகி வந்தால். உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மேனி பளபளப்பாகும் .ரத்தசோகை நீங்கும்.
- முருங்கைக்கீரை பொரியல் செய்வதற்கு முதல் நாளே முருங்கைக்கீரை இலைகளை ஆய்ந்து வைக்காமல், கீரையை ஒரு துணியில் சுற்றி வைத்தால் இலைகள் தனியாக உதிர்ந்துவிடும். காம்புகளை மட்டும் எடுத்துவிட்டு எளிதாக பொரியல் செய்து விடலாம்.
காராமணி :
- காராமணியை வேக வைத்து அத்துடன் சுக்குதூள், மிளகுதூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.
- காராமணியை இரவு முழுவதும் ஊறவைத்து வேகவைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு பட்டு தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள் போட்டு நன்றாக கலக்கவும்.கத்தரிக்காய், காராமணி சேர்த்து வதக்கி நீர்விட்டு வேகவைக்கவும். காராமணி கத்தரிக்காய் வறுவல் ரெடி.
வெங்காயம் :
- நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷஷாக இருக்கும்.
- நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
- அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
- வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.
- வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
பூரி :
- பூரி மாவில் கொஞ்சம் சோயா மாவும் சேர்த்தால், பூரி மொறுமொறுவென இருக்கும்.
- பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
- பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.