லைஃப் ஸ்டைல்

முளைக்கட்டிய பயிரால் கிடைக்கும் நன்மைகள்!!… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நம் பாரம்பர்யம் சுட்டிக்காட்டிய ஆரோக்கிய உணவு வகைகளில் முக்கியமானவை முளைகட்டிய பயறுகள். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் தினசரி சிறிது அளவில் முளைகட்டிய பயறுகள் எடுத்து கொள்வது நல்லது. ஏனெனில் சாதாரணப் பயறுகளைவிட இவற்றில் 20 மடங்கு அதிக ஊட்டச்சத்துகள் உள்ளது. 

மேலும் இதில் வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள்,அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா அமிலம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன. 

எனவே இதனை விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் சத்தான உணவுப் பொருள்.

முளைக்கட்டிய பயிர்களை உணவில் தினமும் எடுத்து கொள்ளவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு தேவையான எனர்ஜியை தரும்.

இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

ALSO READ  கொரோனாவால் செழிக்கும் கிருமிநாசினி வர்த்தகம்....

முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. இதனால் உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இதனால் கண்களுக்கு குளிர்ச்சி தரும், பார்வைத் திறனை மேம்படுத்தும்.

அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன. 

புற்றுநோயை எதிர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 

முளைகட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின் பி, மென்மையான சருமத்தைத் தருகிறது. தோல் புற்றுநோயைத் தடுக்கும். சருமம் புத்துணர்வு பெற உதவும்..  

இவற்றில் இருக்கும் சிலிக்கா நியூட்ரியன்கள் (Silica Nutrients), சருமத்தில் ஏற்படும் செல் இழப்பைத் தடுத்து, செல் பாதிப்பைத் தடுத்து, செல் மறுசீரமைப்புக்குத் துணைபுரிகிறது. 

அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட் இவற்றில் உள்ளதால், நம் உடலில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலைத் (Puperty) தடுக்கிறது. 

ALSO READ  ஏழைகளின் இறைச்சி வெந்தயம்- எப்படி சாப்பிட்டால் பலன்...

இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது; ரத்த விருத்திக்கும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றைத் தடுக்கிறது. 

அனீமியா எனப்படும் ரத்தசோகை நோயைத் தடுக்கிறது. உடலின் நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, நடுக்கத்தைச் சரிசெய்கிறது.

செய்ய கூடாதவை:-

இவற்றை வேகவைத்தோ எண்ணெயில் பொரித்தோ சாப்பிடக் கூடாது.

முளைகட்டிய பயறைச் சாப்பிட்ட பிறகு, உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஏனென்றால், இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். உணவு, செரிமானம் ஆகாமல் இருக்கும்போது வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகச் சுரப்பதால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வயது முதிர்ந்தவர்கள் முளைகட்டிய பயறுகளை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கணவர் ஒழுங்காக குளிப்பதில்லை:விவகாரத்து கேட்ட மனைவி

Admin

இனி அக்கவுண்ட் தொடங்க செல்ஃபி வீடியோ கட்டாயம் – அதிரடி அறிவிப்பு !

naveen santhakumar

முகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே உடலிலுள்ள நோய்களை கண்டறியலாம்….எப்படி…???

Shobika