லைஃப் ஸ்டைல்

பெண்களை….இனிமே கிரீன் டீ குடிக்க மட்டும் பயன்படுத்தாம இதுக்கும் பயன்படுத்துங்க…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் டீ பேக்குகளை கொண்டு சருமம், கூந்தல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை களையலாம். கிரீன் டீ பேக்கை கொண்டு தேநீர் தயாரித்த பிறகு அந்த டீ பேக்கை மிதமான சூட்டில் கண்களில் வைக்கலாம். அல்லது டீ பேக்கை குளிர்சாதன பெட்டியில் குளிரவைத்துவிட்டு அதனை கண்களில் வைக்கலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் கண்களில் ஏற்படும் வீக்கம் குறையும். கருவளையங்களும் மறைய தொடங்கிவிடும்.

ALSO READ  தொடங்கியது காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!

கிரீன் டீ பருகிய பிறகு டீ பேக்கை சருமத்திற்கு உபயோகப்படுத்தலாம். அது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகளை கொண்டது. டீ பேக்கை கத்தரித்துவிட்டு அதில் இருக்கும் துகள்களை ‘பேஸ் பேக்’ தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தலாம். அதனை சருமத்தில் தடவுவது இயற்கையாகவே பிரகாசத்தை ஏற் படுத்தி கொடுக்கும். வயதான தோற்றம் தென்படுவதை தள்ளிப்போட வைக்கும். குளியல் நீரில் டீ பேக்குகளை சில நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு குளிக்கலாம். அது உடலுக்கு இதமளிக்கும்.

பயன்படுத்தப்படாத டீ பேக்குகளை கொண்டு சருமத்தை சுத்தப்படுத்தலாம். ஆழமான சரும சுத்திகரிப்புக்கு நீராவி சிறந்தது. நீராவியில் டீ பேக்குகளை 10 நிமிடங்கள் வைத்துவிட்டு சருமத்தில் தடவலாம். அது சரும துளைகளை சுத்தப்படுத்துவதற்கு உதவும். டீ பேக்குகளை வெந்நீரில் கலந்து வடிகட்டி தலைமுடியை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். உச்சந்தலையில் தேயிலை நீரை ஊற்றி மசாஜ் செய்து குளித்து வந்தால் முடி தொடர்பான பிரச்சினைகள் நீங்கிவிடும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீங்க மஷ்ரூம் பிரியரா : வாங்க சுவையான மஷ்ரூம் சாப்பிடலாம்

Admin

பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் அப்பிலும் விரைவில் விளம்பரம்!

Admin

குளிர்காலத்திற்கு ஏற்ற “ஆப்பிள் டீ”

Admin