பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்து விளக்கேற்றி, இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு கரும்பு உள்ளிட்டவை வைத்து பொங்கல் வைக்க வேண்டும்.
ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும். பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, ‘பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும் அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி என்பது கூடுதல் தகவல்.