இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இணைந்து, நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தின் செயல்பாடுகள், சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.
டாடா ஸ்டார்பஸ்ஸின் இந்த புதிய ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தின் இன்ஜின் தண்ணீர் மற்றும் வெப்பத்தால் இயக்கப்படுவதால் சுற்றுப்புறத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, மாசுபாடு மட்டுமின்றி, சத்தமும் வராது.
ஹைட்ரஜன் ஆற்றல் கொண்ட டாடா ஸ்டார்பஸ் எரிபொருள் பேருந்து, பூஜ்ய கழிவு வெளியீட்டு வாகனமாக திகழ்கிறது. சுற்றுசூழலுக்கு ஏற்ற சிறந்த வாகனமாக திகழ்கிறது. இதனால் இந்த வாகன தயாரிப்பில் இஸ்ரோவும் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த பேருந்தில் 30 பயணிகள் வரை அமர்ந்து பயணிக்கலாம். மேலும், 114 குதிரைத் திறனும், எலக்ட்ரிக் புரொபல்ஷன் மோட்டார் மூலம் 250 குதிரைத் திறனும் உருவாக்கப்படுகிறது. ஒட்டுமொத்த டர்க்யூ 800 rpmக்கு, 1050 Nm உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போதைய எரிபொருள் பேருந்துகள் 20% அளவிற்கு வேதியியல் சக்தியை ஆற்றலாக மாற்றுகிறது. ஆனால் ஸ்டார்பஸ் எரிபொருள் இன்ஜின் கொண்ட பேருந்துகளில் 40-60% அளவிற்கு வேதியியல் சக்தியை ஆற்றலாக மாற்றுகிறது. அதாவது மூன்று மடங்கு அதிகம். ஸ்டார்பஸ் எரிபொருள் வாகனங்கள் எரிபொருள் பயன்பாட்டை 50% அளவிற்கு குறைக்கின்றன.