உலக அளவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது. இதுவரை 38,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 1,70,000 ஆயிரம் பேர் வரை இந்த நோய் பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளனர்.
இதனிடையே அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தனது துணை நிறுவனமான ஜேன்ஸன் ஃபார்மசீயூடிகல்ஸ் (Janssen Pharmaceuticals) நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்காக 450 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.
இந்த தடுப்பு மருந்து வரும் செப்டம்பரில் மனிதர்கள் மீது சோதனை செய்ய உள்ளதாகவும், அதன்பின் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனைக்காக அமெரிக்க அரசின் BARDA (Biomedical Advanced Research and Development Authority) ஒப்பந்தம் போட்டுள்ளது இதற்காக அமெரிக்க அரசு 100 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி உள்ளது.
இதேபோல் மற்றொரு அமெரிக்க நிறுவனமான அபாட் (Abbott) அதிவிரைவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் சிறிய கருவியைக் கண்டுபிடித்துள்ளதாகவும், இதன்மூலம் 5 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும் என்றும் கூறியுள்ளது.
இந்த கருவி ஆய்வுக்குப் பின் இது விரைவில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. மிகச் சிறிய இந்தக் கருவியைத் தேவைப்படும் இடத்துக்கு எளிதில் எடுத்துச் செல்ல முடியும் எனவும் அபாட் தெரிவித்துள்ளது.