காலம் மாறிவிட்டது…நம் உணவு பழக்கம் மாறிவிட்டது. அதேபோல் நாம் உணவு உண்ணும் பழக்கமும் மாறிவிட்டது.
தரையில் அமர்ந்து சாப்பிட்ட காலம் போய், பொருளாதார உயர்வு, வயது முதிர்வு, அலுவலகச்சூழல் ஆகிய காரணங்களால் நாம் சம்மணமிட்டு சாப்பிடுவதையே கிட்டத்தட்ட மறந்து விட்டோம்.
இதனை நாகரீகமாகவும், பெருமையாகவும் கருதினாலும் அது ஒரு வகையில் உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.
நாம் டைனிங் டேபிளில் கால்களை தொங்கவிட்டவாறு சாப்பிடும் போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்கு செல்லாமல் கால்களுக்கே அதிகம் செல்கிறது.இதனால் உணவு செரிமானம் சரியாக நடைபெறாமல் வயிற்று கோளாறுகள் நடைபெறும். இதே சம்மணமிட்டு சாப்பிட்டால் உணவு எளிதில் சீரணமடையும்.
அதேபோல் கட்டில், சோபாவில் அமரும் போது சம்மணம் இட்டே அமர வேண்டும். அப்படி அமருவது ஒரு ஆசனம் கூட… அதனால் 3 வேளைகள் அப்படி சாப்பிட முடியாவிட்டாலும் ஒருவேளையாவது சாப்பிட முயற்சியுங்கள்.