இன்றைக்கு, நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என்கிறது சமீபத்திய ஆய்வு. பொதுவாக உணவின் மூலம் ரத்தம் உற்பத்தியாவதில்லை. அதேசமயம் உணவில் இருக்கும் இரும்புச்சத்தும் ரத்தம் உருவாக ஒரு காரணம். ரத்தத்தில் இருப்பது, ஹீமோகுளோபின். ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம். ஹீமோகுளோபின் ஒரு நிறமி ஆகும்.
அது நமக்கு உணவின் மூலமாகக் கிடைக்கிறது. உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்று கோளாறு, சுவாசக் கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும்.
ஃபோலிக் அமில குறைபாட்டை தடுக்க பச்சை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரத்தம் உடம்பில் ஊற அடிக்கடி சிறிது நாவல் பழத்தை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்கள் ஊற வைத்து, பின் தினமும் 2 வேலை சாப்பிட வர ரத்தம் ஊற செய்யும்.
சர்க்கரை பாதாமி பழம் (Apricot), உலர் திராட்சை, பேரிச்சம் பழம், மாதுளம்பழம், தர்பூசணியில் கொய்யாப் பழம் அத்திப்பழம் உள்ளிட்ட பழங்களை தவறாது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தினமும் இரவு அரை டம்ளர் தண்ணீரில் 3 அத்திப்பழத்தை போட்டு,பின் காலை வெறும் வயிற்றில் அதை குடிப்பதன் மூலம் இரத்தம் அதிகரிக்கும். அதேபோல் தினமும் பிட்ரூட்டை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
முக்கியமாக, எந்தப் பழத்தையும் சாப்பிடுவதற்கு முன்னர் உப்புத் தண்ணீரில் ஒரு மணி நேரமாவது ஊறவைத்து, பிறகு சாதாரண நீரில் நன்றாகக் கழுவி உண்ண வேண்டும். இப்படிச் செய்வது பழத்தின் மேற்புறத்தில் உள்ள பூச்சிக்கொல்லிப் படிமங்களை நீக்கிவிடும்.