கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அறிகுறி இல்லாத நபர்களை பரிசோதிப்பதால் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ஏற்படும் தேவையற்ற பணிச்சுமையை குறைப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்றால் பரிசோதனை தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சல், சளி, உடல் வலி, மூச்சுத்திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும் நபர்கள் மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு குறைப்பிற்கான மருத்துகளை எடுத்துக் கொள்பவர்கள் ஆகியோர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.