டெல்லி, ஜங்புரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி,
மோடி அரசாங்கம் அதானி மற்றும் அம்பானிக்காகத்தான் செயல்படுகிறது. `மேட் இன் இந்தியா’ திட்டத்தைக் கொண்டுவந்தால், 2 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஏர் இந்தியா, ரயில்வே, ரெட் ஃபோர்ட் உட்பட அனைத்தையும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள மோடி அரசு தாஜ்மஹாலையும் கூட விற்றுவிடுவார்கள். பா.ஜ.க-வினர் மதத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், எந்த மதமும் வன்முறையைப் பற்றி பேசவில்லை. காங்கிரஸ் வெறுப்பைப் பேசாது என்று பேசியுள்ளார் ராகுல் காந்தி.
துடிப்பான பொருளாதாரத்தை உருவாக்குவதுதான் எங்களின் இலக்கு என்று நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து 2020 -21 பட்ஜெட் குறித்து ட்வீட் செய்திருக்கும் ராகுல்,
பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. இதற்கு உங்கள் மீது விழுந்திருக்கும் பழியை எப்படித் தவிர்ப்பது என சிந்தித்து கொண்டிருப்பீர்கள். பயன்படாத ஒரு பட்ஜெட்டை நிர்மலா ஜி சமர்ப்பித்திருக்கிறார்.
அவரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முழு பழியையும் அவர் மீது போட்டுவிடுங்கள். பிரச்சனை தீர்ந்தது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.