நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான்.திராவிட இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றி வந்த சீமான், 2009ம் ஆண்டு நிறைவு பெற்ற ஈழப்போருக்கு பிறகு தமிழ்த்தேசிய அரசியலை கையிலெடுத்தார்.
சீமான் தற்போது வரை அனைத்து தேர்தல்களிலும் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு வருகிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 17 லட்சம் வாக்குகள் பெற்று பெரிய கட்சிகளையே ஆச்சரியப்பட வைத்தார்.
சீமானுக்கும் தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்து மகளான கயல்விழிக்கும் சில ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு 2019 ஜனவரி 11 அன்று சீமான்-கயல்விழி தம்பதியினருக்கு மகன் பிறந்தான்.
மகனுக்கு ‘மாவீரன் பிரபாகரன்’ என தனது தலைவரின் பெயரை சீமான் சூட்டியுள்ளார்.மகன் பிறந்து ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் மாவீரன் பிரபாகரனுக்கு முதலாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக சீமான் வீட்டில் உறவினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் அழைக்கப்பட்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது.