தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், அதற்கான ஆயத்த பணிகளும் நடைபெற்று வருகின்றன. நேற்று தமிழகத்தில் பெண்கள் போட்டியிட உள்ள மாநகராட்சிகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள வார்டுகளில் யார், எந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 32வார்டுகள் அதில் 16 வார்டுகள் பெண்களுக்கும், 16 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு 84 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.