தமிழகத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் காட்சிகள் தங்களின் தீவிர பிரச்சாரத்தின் மூலம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
அந்தவகையில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி. ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன், தனது தந்தைக்கு ஆதரவாக நிலையூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சுப்ரமணியன் என்ற ஆசிரியர், ராஜன் செல்லப்பாவுக்கு தான் நன்றி தெரிவிக்க விரும்புவதாக கூறினார்.
இது தொடர்பாக பேசிய அவர், பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகன் நடராஜன் புற்று நோயினால் பாதிக்கப்பட்டதாக கூறினார். தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கும் ராஜன் செல்லப்பா உதவி செய்ததாக கூறினார். மேலும் அவர், தனது மகனுக்கு ராஜன் செல்லப்பா செய்த உதவியை வாழ்நாளில் மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
#ADMK #DMK #PMK #BJP #CONGRESS #TAMILNADU #TNELELCTION2021 #EDAPPADIPALANISAMY #TamilThisain #RajanChellappa