ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு விருது வழங்குவது ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டது .
ராமநாதபுரம் மாவட்டத்தில் , நடப்பு ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் வி . ரவி , போ . முத்துக்குமார் , பெரியபட்டணம் ரா . சந்தான கிருஷ்ணன் ,
அ . ஆல்பர்ட் , மனோகரன் , பா.நிர்மலாதேவி , டார்த்தி கரோலின் , ஆ . செங்கோல் திரவியம் , மா . முனீஸ்வரி , மி . ஆரோக்கிய பன்னீர்செல்வம் ஆகிய 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக் கப்பட்டது .
ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் 9 பேருக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டது .
இதில் , ஆசிரியர் முத்துக்குமார் மீது வழக்கு இருப்பதால் நல்லாசிரியர் விருது நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார் .
சி.திவ்யதர்ஷினி