சென்னை:-
பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து அப்போதைய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் பேரில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்ட உத்தரவின் பேரில் பாஜகாவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கல்யாணராமனின் மனைவி சாந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தவிட்டுள்ளது.