அரசியல்

கலைஞரின் கனவு நிறைவேறியது; திண்டுக்கல் ஐ. லியோனி பேட்டி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்கவுள்ளர். இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஐ. லியோனி திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலது தெரிவித்தார். அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “பத்து ஆண்டுகள் தமிழகம் கண்ட கனவு நனவாகியுள்ளது. கலைஞரின் ஆசையும் நிறைவேறியுள்ளது.அறிவாலயம் முழுவதும் கலைஞரின் நினைவால் நிரம்பி உள்ளது. இந்த வெற்றி மத ஒற்றுமைக்கும், கலைஞரின் நல திட்டத்திற்கும், கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார். 

ALSO READ  திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல்...

இந்த தேர்தலில் மக்கள் மத அரசியலுக்கு சவுக்கடி கொடுத்துள்ளனர். மாநில சுயாட்சியை மீட்டெடுத்துள்ளனர் என தெரிவித்த அவர் இன்று முதல் தமிழகத்திற்கு விடிவு காலம் துவங்கியுள்ளது எனக் கூறினார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் கமல்..!

News Editor

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடும் பின்னடைவு !

News Editor

அதிமுக ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்…!

naveen santhakumar