தே . மு . தி . க . தலைவர் விஜயகாந்த் துபாயில் மருத்துவ சிகிச்சை முடிந்து நேற்று அதிகாலை சென்னை திரும்பி வந்தார் . தே . மு . தி . க . வின் பொதுச்செயலாளருமான மற்றும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 30 ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றார் .
அவருடன் இளைய மகன் சண்முகபாண்டியன் மற்றும் 2 உதவியாளர்கள் சென்றனர் . கடந்த 3 ஆம் தேதி விஜயகாந்த் மனைவி பிரேமலதா , கணவருக்கு உதவியாக துபாய் சென்றார் .
விஜயகாந்துக்கு லண்டன் டாக்டர் ஒருவர் துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது . கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் குணமடைந்து நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் நடித்த சத்ரியன் திரைப்படத்தை அவரது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர்களுடன் சேர்ந்து பார்ப்பது போலவும் புகைப்படம் வெளியானது .
இந்த நிலையில் விஜயகாந்த் , துபாயில் சிகிச்சை முடிந்து தனது மனைவி பிரேமலதாவுடன் நேற்று அதிகாலை துபாயில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தார் . பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார் .