அரசியல்

சென்னைக்கு திரும்பிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்…!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தே . மு . தி . க . தலைவர் விஜயகாந்த் துபாயில் மருத்துவ சிகிச்சை முடிந்து நேற்று அதிகாலை சென்னை திரும்பி வந்தார் . தே . மு . தி . க . வின் பொதுச்செயலாளருமான மற்றும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 30 ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றார் .

அவருடன் இளைய மகன் சண்முகபாண்டியன் மற்றும் 2 உதவியாளர்கள் சென்றனர் . கடந்த 3 ஆம் தேதி விஜயகாந்த் மனைவி பிரேமலதா , கணவருக்கு உதவியாக துபாய் சென்றார் .

விஜயகாந்துக்கு லண்டன் டாக்டர் ஒருவர் துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது . கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் குணமடைந்து நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் நடித்த சத்ரியன் திரைப்படத்தை அவரது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர்களுடன் சேர்ந்து பார்ப்பது போலவும் புகைப்படம் வெளியானது .

ALSO READ  குழாய் வழியாக இயற்கை எரிவாயு….பிரதமர் மோடி பெருமிதம்….

இந்த நிலையில் விஜயகாந்த் , துபாயில் சிகிச்சை முடிந்து தனது மனைவி பிரேமலதாவுடன் நேற்று அதிகாலை துபாயில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தார் . பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார் .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மோடி – சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்

Admin

தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பாக அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை மனு

News Editor

காங். மூத்த தலைவர் சசி தரூருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

Admin