அரசியல்

அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த ஐ.பெரியசாமி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை  8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக கூட்டணி 78 சட்டமன்ற தொகுதிகளிலும், ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 156 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.  கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து  வந்த நிலையில் தற்போது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில் சில தொகுதிகளில் வாக்கு என்ணிக்கை நிறைவு பெற்று வெற்றி வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1.34,082 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இந்த சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு விகிதத்தில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ.வ.வேலு 94673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 


Share
ALSO READ  சிம்புவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு

Admin

அதிமுகவை வெற்றி பெற வைப்பதே எங்கள் நோக்கம்-சி. டி. ரவி பேட்டி !

News Editor

மய்யத்தின் தலைமையில் மூன்றாவது அணியா..! சரத்குமார் விளக்கம்

News Editor