சென்னை:-
ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் காலியாக உள்ள இரு இடங்களுக்கான வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி மற்றும் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்த கே.பி. முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து கடந்த மே 7-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து தமிழகம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற 4ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கும் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் மற்றும்சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சோமு ஆகியோர் போட்டியிடுவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எனவே காலியாக அறிவிக்கப்பட்ட இந்த இரு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்.,15ல் துவங்கி செப்.,22ல் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்களான டாக்டர் கனிமொழி கே.ஆர்.என். ராஜேஷ்குமார் இருவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது