தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோவை கொடீசியா மைதானத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களிடம் வாங்கிய மனுக்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றார். மேலும், சிலம்பக் கலையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும் தேர்தலுக்காகவும், அரசியலுக்காகவும் வருபவன் தான் அல்ல என்றும், மக்களோடு மக்களாக எப்போதும் இருப்பவன் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடக்கும் அரசு அராசங்கமே இல்லை என்றும், இது ஊழல் வாதிகளால் நடத்தப்படும் ஊழல் செய்யும் அரசு என்றார். தமிழகம் வரும் மோடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார், ஆனால் வந்து சென்றபிறகு பெட்ரோல், எரிவாயு விலையைக் உயர்த்துவார் என குற்றம்சாட்டினார்.