அரசியல் தமிழகம்

திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


சென்னை:-

தி.மு.க  பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட உள்ளதாகவும், எனவே திமுக பொருளாளர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகையில்:-

மார்ச் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்வு நடைபெற உள்ளது. கழக பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு தான் போட்டியிட விழைவதாகவும், எனவே தாம் வகித்து வரும் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்தார். இதை நான் என்று கொள்கிறேன்

எனவே வரும் 29ஆம் தேதி கழகப் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளருக்கான தேர்வு நடைபெறுகிறது. எனவே கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

ALSO READ  வெளியாகிறது திமுகவின் வேட்பாளர் பட்டியல்; கவலையில் தொண்டர்கள் !

இதன் மூலமாக திமுக பொதுச்செயலாளர் பதவி துரைமுருகனுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் திமுக பொருளாளர் பதவிக்கு யார் போட்டியிடுவார் என்ற விவரம் விரைவில் தெரியவரும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவலை தடுக்க 18 வகையான மூலிகை மருந்துகளை திருடிய திருடர்…

naveen santhakumar

வேலூரில் 32 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று !

News Editor

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் மருத்துவமனையில் அனுமதி !

News Editor