சென்னை:-
தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட உள்ளதாகவும், எனவே திமுக பொருளாளர் பதவியில் இருந்து விலக துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகையில்:-
மார்ச் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்வு நடைபெற உள்ளது. கழக பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு தான் போட்டியிட விழைவதாகவும், எனவே தாம் வகித்து வரும் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்தார். இதை நான் என்று கொள்கிறேன்
எனவே வரும் 29ஆம் தேதி கழகப் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளருக்கான தேர்வு நடைபெறுகிறது. எனவே கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
இதன் மூலமாக திமுக பொதுச்செயலாளர் பதவி துரைமுருகனுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் திமுக பொருளாளர் பதவிக்கு யார் போட்டியிடுவார் என்ற விவரம் விரைவில் தெரியவரும்.