தமிழகத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் காட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு பணிகளை முடித்துவிட்டு தங்களின் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதற்காக ஓமலூர் வந்த முதல்வர் பழனிச்சாமி அதிமுக அலுவலகத்துக்கு சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் சேலம் மாநகர மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார்.
அதில் சேலம் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து அவர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.